Tamilசெய்திகள்

அண்ணா, பெரியார் மண்ணில் மோடி மஸ்தான் வேலை எடுபடாது – மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தஞ்சை ஒரத்தநாட்டில் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:

* காவிரி உரிமையை மீட்டுக்கொடுத்து அதன் உரிமையை காப்பாற்றி வருவது திமுக தான்.

* காவிரி நடுவர் மன்றம் அமைக்க 1975 முதல் போராடி இடைக்கால தீர்ப்பை பெற்று தந்தவர் கருணாநிதி.

* காவிரி கரையில் பிறந்து உயிர் பிரியும் வரை காவிரி உரிமைக்காக போராடிய தலைவர் கருணாநிதி.

* திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்வோம்.

* திமுக எப்போதும் சொல்வதை செய்யும், செய்வதை சொல்லும்.

* அண்ணா, பெரியார் மண்ணில் மோடி மஸ்தான் வேலை எல்லாம் எடுபடாது.

இவ்வாறு அவர் கூறினார்.