Tamilசெய்திகள்

அடுத்த பிரதமரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் தீர்மானிப்பார் – ஆ.ராசா பேச்சு

தி.மு.க.வின் 15-வது பொதுக்குழு தேர்தலில் மீண்டும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஆ.ராசா எம்.பி., தனது நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

இந்தநிலையில் தொகுதிக்குட்பட்ட திருப்பூர் மாவட்டம் அவினாசிக்கு இன்று வந்தார். அவருக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக அவிநாசி பேருந்து நிலையம் முன்பு மேளதாளம் முழங்க மிக பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் ஆ.ராசா எம்.பி., பேசுகையில், துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கிய தி.மு.க. தலைமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நிர்வாகிகள், தொண்டர்கள் ஆதரவால் தான் நான் நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆனேன்.

கொரோனா காலத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற உடன் சிறப்பாக செயல்பட்டார். அவரிடம் நான் கோரிக்கை விடுத்ததும் தாளவாடியில் அரசு கல்லூரியை தொடங்கி வைத்தார்.வருகிற பாராளுமன்ற தேர்தல் மூலம் அடுத்த பிரதமரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் தீர்மானிப்பார் என்றார்.