Tamilசெய்திகள்

அடுத்த ஆண்டு ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி – தமிழருவி மணியன்

பொள்ளாச்சியில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் நிருபர்களிடம் கூறியதாவது-

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது சர்வ நிச்சயம். கட்சியை தொடங்க அடிப்படை கட்டமைப்புகள் தேவை. அதற்கான பணிகளை கடந்த 2 ஆண்டுகளில் அவர் செய்துவிட்டார்.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் ஓட்டுச்சாவடிகளில் தங்கள் பிரதிநிதிகளை அமர்த்தும் தகுதி அ.தி.மு.க.- தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மட்டுமே உள்ளது.

வேறு எந்த கட்சிக்கும் 234 தொகுதிகளிலும் தங்கள் பிரதிநிதிகளை அமர்த்த முடியாத நிலை உள்ளது. ஆனால் ரஜினிகாந்த் 234 தொகுதிகளிலும் ஓட்டுச்சாவடிகளில் பிரதிநிதிகளை அமர்த்தும் பணியை செய்துள்ளார்.

இதுபற்றி தெரிந்ததால் தான் அவர் அடுத்த ஆண்டு அரசியலுக்கு வருவார் என்பதை உறுதியாக கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *