Tamilசெய்திகள்

அக்னிபாத் திட்டத்தை அரசு திரும்ப பெற வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய ராணுவத்தின் தரைப் படை, கடற்படை, வான்படைக்கு வீரர்களை தேர்வு செய்வதற்காக, ‘அக்னிபாத்’ என்ற புதிய திட்டத்திற்கு, பா.ஜ.க. அரசின் அமைச்சரவை, ஒப்புதல் அளித்து உள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை இந்தியப் படையில் சேர்த்துவிட்டு, தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு அளிக்காமல், 4 ஆண்டுகளில் தூக்கி வீசுகின்ற நடைமுறை, ராணுவத்தின் மதிப்பையும், மரியாதையையும் குறைத்து விடும்.

4 ஆண்டுகள் படைப்பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கு, அதன்பிறகு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாக ஆகி விடும். இந்தத் திட்டத்தால், இந்திய இளைஞர்களின் ஒட்டுமொத்தமான எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும் என்பதை பா.ஜ.க. அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். ‘அக்னிபாத்’ திட்டத்தைத் திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.