Tamilவிளையாட்டு

விராட் கோலியுடன் என்னை ஒப்பிட வேண்டாம் – பாபர் அசாம்

பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் அளித்த ஒரு பேட்டியில், ‘‘என்னையும், விராட் கோலியையும் ஒப்பிட்டு பார்க்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நாங்கள் இருவரும் வெவ்வேறு வகையான வீரர்கள். எல்லா நேரங்களிலும் களம் இறங்குகையில் சிறப்பாக பேட்டிங் செய்து அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்று நான் பாடுபடுகிறேன். பூட்டிய ஸ்டேடியத்தில் போட்டியை நடத்துவது ரசிகர்களுக்கும், எங்களுக்கும் சிறந்ததாக இருக்காது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு எடுக்கும் என்று நம்புகிறேன்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முழுமையான உறுதி அளித்தால் மட்டுமே வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்று விளையாடும்’’ என்று தெரிவித்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *