Tamilசெய்திகள்

வடக்கு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 5 வீரர்கள் பலி

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவி இந்திய பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாரா சங்கிமுல்லா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வீட்டிற்குள் நுழைந்து அங்குள்ளவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைக்க திட்டமிட்டுள்ளதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே உள்ளூர் போலீசார் துணையுடன் ராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது பயங்கரவாதிகள் ராணுவத் வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்கு இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

அதேசமயம் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த கர்னல், மேஜர், இரண்டு வீரர்கள் மற்றும் காஷ்மீர் போலீஸ் ஒருவர் என ஐந்து பேர் வீர மரணம் அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *