Tamilவிளையாட்டு

ரோகித் சர்மாவை டி20 அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் – யுவராஜ் சிங் கருத்து

இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வரும் ரோகித் சர்மா, ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் மூன்று முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்றது.

இதனால் அவரை கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் யுவராஜ்சிங் , டி20 கிரிக்கெட்டிற்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மா குறித்து யுவராஜ் சிங் கூறுகையில் ‘‘முன்னதாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் என இரண்டு வகை கிரிக்கெட் முறைதான் இருந்தது. இதனால் ஒரே கேப்டன் என்பது சரியானதாக இருந்தது. தற்போது மூன்று வகை கிரிக்கெட் இருக்கிறது. விராட் கோலி வேலைப்பளு அதிகம் என்று உணர்ந்தால், மற்றொருவரிடம் டி20 அணி கேப்டன் பொறுப்பை கொடுக்க முயற்சி செய்யலாம். ரோகித் சர்மா மிகவும் வெற்றிகரமான கேப்டன்.

விராட் கோலியின் வேலைப்பளுவை அணி நிர்வாகம் எப்படி எடுத்துக் கொள்ள போகிறது என்று எனக்குத் தெரியாது. அவர்கள் டி20-யில் ஏதாவது செய்ய விரும்பினால், அவர்கள் எதிர்காலத்தில் எப்படி செல்ல இருக்கிறார்கள் என்பதை பொறுத்தது. விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன். அவரது வேலைப்பளுவை எப்படி நிர்வகிப்பார்?. இதுகுறித்து அணி நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *