Tamilசினிமா

ரஜினியின் ‘தர்பார்’ படத்திற்கு தடை கேட்டு வழக்கு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், தர்பார் திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவை சேர்ந்த டி.எம்.ஒய். கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில், “ ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்திற்காக லைகா நிறுவனம் ரூ.12 கோடியை ஆண்டுக்கு 30 சதவீதம் வட்டிக்கு கடனாக பெற்றது. வட்டியுடன் சேர்த்து ரூ.23.70 கோடி வழங்கும் வரை தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு லைகா நிறுவனம் ஜனவரி 2ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *