Tamilசினிமா

மீண்டும் போலீஸாக களம் இறங்கிய அருண் விஜய்

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகர் அருண் விஜய். அந்த வகையில் அண்மையில் இவர் நடிப்பில் வெளியான குற்றம் 23, தடம் உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.

இவர் அடுத்ததாக பாக்ஸர், மாஃபியா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் கிரைம் திரில்லர் படத்தில் அருண் விஜய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *