Tamilசினிமா

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராதிகா ஆப்தே

பாலிவுட்டில் முன்னணி நடிககைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் இந்தி மட்டும் அல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். ராதிகா ஆப்தே கவர்ச்சி காட்டுவதில் குறையே வைப்பது இல்லை. இதனால் இயக்குனர்களின் தேர்வு பட்டியலில் இவருக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

போதாத குறைக்கு தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி போட்டோக்களை போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். தமிழில் நடிகர் ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்ததன் மூலம் தமிழகம் முழுவதும் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் ராதிகா ஆப்தே. அப்போது அவர் அணிந்திருந்த உடை பெரும் சர்ச்சையாகியுள்ளது.

கறுப்பு நிற உடை அணிந்துள்ள ராதிகா ஆப்தே அதற்கு உள்ளாடை அணியாமல் போஸ் கொடுத்துள்ளார். இதேபோல் வலை போன்ற உடையில் தொடை தெரியும் அளவுக்கு ஆடை உடுத்தியிருக்கிறார். ராதிகா ஆப்தே அணிந்து வந்த இந்த உடையை பார்த்த ரசிகர்கள் முகம் சுளித்துள்ளனர். அதே நேரத்தில் ராதிகா ஆப்தேவின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *