Tamilசெய்திகள்

மாவட்ட எல்லைகளை தாண்டி வந்து மது வாங்கினால் நடவடிக்கை! – காவல்துறை எச்சரிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், தமிழகத்தில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன. சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில், சென்னை மாநகர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அண்டை மாவட்டங்களுக்கு சென்று மது வாங்கினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சென்று மது வாங்க முயற்சித்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *