Tamilசெய்திகள்

மதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டவர் வைகோவுக்கு நன்றி தெரிவித்து ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

மதிமுக-வின் ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி பதவியில் இருந்து நீக்கப்பட்டவர், வைகோவுக்கு நன்றி தெரிவித்து ஒட்டிய போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமாநாதபுரத்தை சேர்ந்த பணக்கார குடும்பத்தை சேர்ந்த அரு.சுப்ரமணியன் என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மதிமுக-வில் இணைந்தார். அவரது செயல்பாடுகளால் கவரப்பட்ட கட்சியின் செயலாளர் வைகோ அவருக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவி வழங்கினார்.

இதற்கிடையே, கடந்த மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி வேட்பாளர் நவாஸ்கனிக்கு ஆதரவாக சுப்பிரமணியன் செயல்படாமல், அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து வைகோவின் உதவியாளர் அருணகிரி, அவரிடம் விசாரிக்கையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கட்சியில் இருந்து சுப்ரமணியம் நீக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தான் மதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டதற்காக செயலாளர் வைகோவுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியிருக்குய்ம் சுப்பிரமணியன் அதில், ”கடனாளி ஆக்காமல் கட்சியை விட்டு என்னை நீக்கியதற்கு வைகோவுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதுமாக ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *