Tamilவிளையாட்டு

பெண்கள் டி20 உலக கோப்பை – இறுதிப் போட்டிக்குள் இந்தியா நுழைந்தது

பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்து புள்ளிகள் பட்டியலில் முன்னிலையில் உள்ள அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டிகள் நடைபெற்றுவருகிறது.

அதன் படி ‘ஏ’ பிரிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த இந்திய அணிக்கு ‘பி’ பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த இங்கிலாந்து அணிக்கும் இடையே இன்று முதல் அரையிறுதி போட்டி நடைறுவதாக இருந்தது.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற இருந்த அரையிறுதி போட்டி போட்டி மழை குறுக்கீட்டால் டாஸ் கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

அரையிறுதி போட்டி கைவிடப்பட்டதையடுத்து புள்ளிகள் அடிப்படையில் பட்டியலில் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *