Tamilவிளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – இறுதிப் போட்டியில் நடால், ஜோகோவிச் மோதல்

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா), கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபானோஸ் சிட்சிபாஸை சந்தித்தார்.

இதில் ஜோகோவிச் 6-3, 6-2, 5-7, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப் போட்டியில் ஜோகோவிச் ரபேல் நடாலை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.