Tamilசினிமா

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை!

பிரபல பாலிவுட் நடிகரும், கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை திரைப்படத்தில் டோனியாக நடித்தவருமான சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துக் கொண்டார்.

’எம்.எஸ்.டோனி – தி அண்டோல்ட் ஸ்டோரி’ (M.S. Dhoni: The Untold Story) படத்தில் டோனியாக நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த 2019 ஆம் ஆண்டு நடித்த மூன்று திரைப்படங்களும் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புட் இன்று தற்கொலை செய்துக் கொண்டது இந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த இளம் வயதில் அவருக்கு மன அழுத்தமடையும் அளவுக்கு என்ன பிரச்சினை, என்று இதுவரை தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *