Tamilசெய்திகள்

பரிசு பொருள் வழக்கு – அமைச்சர் செங்கோட்டையனை உச்ச நீதிமன்றம் விடுவித்தது

ஜெயலலிதா கடந்த 1992-ம் ஆண்டு முதல்- அமைச்சராக இருந்த போது ஏராளமான பரிசு பொருள், காசோலைகள், டி.டி.க்கள், வந்தன. இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

முதல்-அமைச்சராக இருப்பவர் தனக்கு வரும் பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும். ஆனால் பரிசு தொகையை தனது சொந்த வங்கி கணக்கில் ஜெயலலிதா டெபாசிட் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து ஜெயலலிதா, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது.

இந்தநிலையில் ஜெயலலிதா, அழகு திருநாவுக்கரசு ஆகியோர் இறந்துவிட்டதால் அவர்கள் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதே நேரம் செங்கோட்டையன் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை சி.பி.ஐ. காலதாமதமாக கையாண்டதால் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே 23 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கை தொடர்ந்து நடத்த விருப்பம் இல்லை என தெரிவித்த நீதிபதிகள் வழக்கில் இருந்து செங்கோட்டையனை விடுவித்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *