Tamilசினிமா

நடிகர் சுஷாந்தின் வாழ்க்கை திரைப்படமாகிறது

பாலிவுட் நடிகர் சுஷாந்த்தின் தற்கொலை திரையுலகில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் சில முன்னணி நடிகர்களின் ஆதிக்கத்தால் தொடர்ந்து பட வாய்ப்புகளை இழந்ததால் சுஷாந்த் மன அழுத்தத்தில் தற்கொலை முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சுஷாந்த் சிங் மரணமும் திரைப்படமாக இருக்கிறது. தற்கொலையா? கொலையா? : ஒரு நடிகன் மறைந்து விட்டான் என அப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஷாமிக் மௌலிக் என்பவர் இயக்குகிறார்.

சினிமா பின்புலமே இல்லாத குடும்பங்களில் இருந்து வரும் நடிகர்களை திரையுலகம் எப்படி நடத்துகிறது, அவர்கள் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்ள எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கிறது என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *