Tamilசெய்திகள்

திமுகவில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியளிக்கிறது – எம்.எல்.ஏ கு.க.செல்வம்

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. கு.க.செல்வம் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திமுகவில் இருந்து என்னை நீக்கியது ஜனநாயக படுகொலை. இதுவரை நான் எந்த கட்சியிலும் இணையவில்லை. தற்போது எந்த கட்சிக்கம் செல்ல நான் விரும்பவில்லை.

ஆயிரம் விளக்கு தொகுதியில் மீண்டும் நான் போட்டியிட்டாலும் வெற்றி பெறும் வாய்ப்பு எனக்கு உள்ளது. யார் எனக்கு வாய்ப்பு கொடுக்கிறார்களோ அவர்கள் கட்சி சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவேன். என் மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இல்லை. திமுகவில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியளிக்கிறது. எனது கடிதத்திற்கு பதில் கடிதம் கூட திமுக தரவில்லை. திமுகவில் இருந்து நிறைய பேர் வெளியே வருவார்கள். திமுகவில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்”.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *