Tamilசினிமா

‘தலைவன் இருக்கின்றான்’ படத்தை மீண்டும் தொடங்கும் கமல்ஹாசன்

கமல்ஹாசன் தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இயக்குநர் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து கமல் – சங்கர் கூட்டணியில் உருவாகும் ’இந்தியன் 2’ படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்தனர். போட்டோ ஷூட் முடிந்து சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் அதன் பிறகு அதனை பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.

கமல் இரண்டு ஆண்டு களுக்கு முன்பு ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை அறிவித்திருந்தார். தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க இருக்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த வாரம் இது தொடர்பாக ரகுமானை சந்தித்திருக்கிறார் கமல். ‘கமலுடன் இணைவது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என ரகுமான் பதிவிட்டு இருந்தார். கமலும் தலைவன் இருக்கின்றான் படத்தை உறுதி செய்தார்.

தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தில் இந்தி நடிகர் சயீப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அமீர் கானுடன் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவ தாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது இதில் கமல் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது. படத்தின் கதாநாயகன், வில்லன் என 2 வேடங்களுமே கமல்ஹாசன் தான்.

அமைதிப்படை பாணியில் இந்த வேடங்கள் இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் தலைவன் இருக்கின்றான் படம் ஒரு சீரியசான அரசியல் கதை என்றும் சொல்கிறார்கள். கமலின் அரசியலுக்கு இந்த படத்தின் கதை பெரிதும் உதவும் என்பதால் தான் இந்த படத்தை தூசி தட்டி எடுத்துள்ளார் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *