Tamilவிளையாட்டு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தொடர்ந்த வழக்கு – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வரும் செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களின் தேர்தலையும் நடத்தி முடிக்க வேண்டும், என்று லோதா கமிட்டி சிபாரிசு செய்திருப்பது ஏற்றுக்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் தேர்தல் அக்டோபர் 22 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி அறிவித்திருக்கிறது.

இதற்கிடையே, லோதா கமிட்டி சிபாரிசுபடி நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அதனை அதிகரித்து உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டனர். அத்துடன் நிர்வாகிகள் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும், தேர்தல் குறித்த முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *