Tamilசினிமா

தடகள விளையாட்டு வீரராக நடிக்கும் ஆதி

நடிகர் ஆதி தற்போது மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் `பார்ட்னர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்குகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐபி கார்த்திகேயன் மற்றும் குளோரி ஸ்டுடியோஸ் ஜி மனோஜ், ஜி ஸ்ரீஹர்ஷா இணைந்து தயாரிக்கின்றனர். பிரவீன்குமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ராகுல் படத்தொகுப்பையும், வைரபாலன் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

படம் பற்றி இயக்குநர் பேசும் போது,

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக விளையாட்டு அடிப்படையிலான திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன, ஆனால் இந்த படம் அதில் இருந்து விதிவிலக்கானது. இது தடகள விளையாட்டு உலகில் நடக்கும் கதை, தனது கனவுகளை நிறைவேற்ற கதாநாயகன் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி பேசும் படம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *