Tamilசெய்திகள்

டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

தலைநகர் டெல்லியில் உள்ள ஜாகீர் நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து 10க்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் அங்கு விரைந்து சென்றன. அவர்கள் 20க்கு மேற்பட்டோரை பத்திரமாக மீட்டனர்.

காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *