Tamilசெய்திகள்

சத்தீஸ்கரில் நக்சல்கள் துப்பாக்கி சூட்டில் இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் பலி

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கேஷ்குதுல் என்ற பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நக்சல்கள் இருக்கும் பகுதியை பாதுகாப்புப்படையினர் சுற்றிவளைத்தனர். இதையறிந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர்.

இதேபோல், சத்தீஸ்கரின் ராஜ்நந்தகன் பகுதியில் இன்று காலை பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையறிந்த நக்சல்கள் அப்பகுதியில் இருந்து தப்பியோடினர். இதையடுத்து அப்பகுதியில் இருந்து நக்சல்கள் பயன்படுத்திய பயங்கர ஆயுதங்களை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *