Tamilவிளையாட்டு

சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளர் ராமாகந்த் அச்ரேக்கர் மரணம்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் போன்ற பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.

இவர் சிறுவனாக இருக்கும்போது ராமாகந்த் அச்ரேக்கர் என்ற பயிற்சியாளரிடம் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார். இவரை சச்சின் எந்த நேரத்திலும் குறிப்பிட மறந்ததில்லை. சச்சின் தெண்டுல்கருக்கு பயிற்சியளித்ததற்காக மத்திய அரசின் துரோணாச்சாரியார் விருதையும் பெற்றுள்ளார்.

87 வயதாகிய ராமாகந்த் அச்ரேக்கர் மும்பையின் இன்று காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *