Tamilவிளையாட்டு

கோலியின் வெற்றிக்கு டோனியின் ஆதரவும் ஒரு காரணம் – பாகிஸ்தான் வீரர் கருத்து

இந்திய அணியின் தலைசிறந்த வீரராக இருக்கும் விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசப்பட்டவர்களில் பாகிஸ்தான் அணியின் அகமது ஷேசாத்தும் ஒருவர். அறிமுகமான காலத்தில் அவரது பேட்டிங் திறமை அப்படி பேசவைத்தது. ஆனால் காலம் செல்லசெல்ல விராட் கோலி தலைசிறந்த வீரராக மாறிவிட்டார். 28 வயதாகும் அகமது ஷேசாத்தின் கிரிக்கெட் வாழ்க்கை சரிவை சந்தித்தது.

இதற்கு அணி நிர்வாகத்திடம் இருந்து போதுமான ஆதரவு கிடைக்காததுதான் முக்கிய காரணம் என்று அகமது ஷேசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அகமது ஷேசாத் கூறுகையில் ‘‘சிறந்த வீரருடன் ஒப்பிட்டு பார்க்கும்போது நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர்களுடைய பின்னணி தெரியாமல் நாம் இருவரை ஒப்பிட முனைகிறோம்.

எந்தவொரு வீரரும் வெற்றிபெற அவர்களுக்கு பயிற்சியாளர், கேப்டன், கிரிக்கெட் போர்டு ஆகியவற்றின் ஆதரவு தேவைப்படுகிறது. ஒரு வீரரோ, வீராங்கனையோ நம்பிக்கை பெற இது அவசியம்.

விராட் கோலி, ரோகித் சர்மா, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், பாபர் அசாம் ஆகியோரின் பின்னணியை பார்த்தால் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஏராளமான தொடர்களை இழந்திருப்பேன். ஆனால், எம்எஸ் டோனி எனக்கு ஆதரவாக இருந்தார் என்று விராட் கோலியே சொல்லியிருக்கிறார். ரோகித் சர்மாவுக்கும் இதே நிலைதான். இருவர் மீதும் எம்எஸ் டோனி நம்பிக்கை வைத்திருந்தார்’’என்றார்.

கடந்த 7 வருடத்ததிற்கு முன் பாகிஸ்தான் அணியில் அறிமுகமான அகமது ஷேசாத், 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 2017-க்குப் பிறகு அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *