Tamilவிளையாட்டு

கோரோனா பீதியின் போது அத்தியாவாசிய பொருட்களை வாங்கி குவிப்பது தவறு – ஸ்டெயின் கவலை

தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். இவர் பாகிஸ்தானில் நடைபெற்ற சூப்பர் லீக் டி20 தொடரில் விளையாடினார். கொரோனா வைரஸ் தொற்று அசுரவேகத்தில் பரவத் தொடங்கியதால் நாக்-அவுட் சுற்று போட்டிகள் (இரண்டு அரையிறுதி, இறுதி போட்டி) ரத்து செய்யப்பட்டன.

டேல் ஸ்டெயின் ஓட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். தற்போது சொந்த நாடு திரும்பியுள்ளார். கொரோனா பீதியால் தென்ஆப்பிரிக்காவில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பீதி நிலவுவதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிக்கின்றனர். இதனால் அனைவருக்கும் அந்த பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தட்டுப்பாட்டால் விலையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அவசர காலக்கட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிப்பது நியாயம் அல்ல என்று டேல் ஸ்டெயின் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டேல் ஸ்டெயின் கூறுகையில் ‘‘அத்தியாவசிய பொருட்களை மொத்தமாக வாங்கி வைப்பது சரியான வழி அல்ல என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும். அனைவருக்கும் தேவையான பொருட்களை இப்படி வாங்குவது நியாயம் அல்ல. நான் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றிருந்தேன். அங்கு அனைவரும் டாய்லெட் பேப்பர்களை வாங்கிச் சென்றனர். நமக்கு என்ன வேண்டுமோ? அதை மட்டும் வாங்க வேண்டும். எல்லாமே அவசியம் என்று நாம் கருதக்கூடாது என்றார்.’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *