Tamilசெய்திகள்

கொரோனாவால் சென்னயை சேர்ந்த பெண் பலி!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு 35 பேர் பலியாகியிருந்தனர்.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,328 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார்.

பூந்தமல்லியை சேர்ந்த 56 வயதான பெண் ஓராண்டாக சிறுநீரகப் பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கடந்த 1-ந்தேதி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 5-ந்தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர் மரணமடைந்ததை அடுத்து கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36-ஆக உயர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *