Tamilசெய்திகள்

கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்காக தனி ஆம்புலன்ஸ் சேவை!

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பாக 108 ஆம்புலன்சில் பணிபுரியும் மருத்துவ பணியாளர் மற்றும் வாகன ஓட்டுநருக்கு கொரோனா வைரஸ் பாதுகாப்பு கவசத்தை மாவட்ட கலெக்டர் டாக்டர். பிரபாகர் வழங்கினார்.

கிருஷ்ணகிரியில் மொத்தம் 24 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 24 ஆம்புலன்ஸ்களிலும் விழிப்புணர்வு பதாகை ஒட்டப்படுகிறது. கொரோனொ வைரஸ்க்கு மட்டும் தனி ஒரு 108 ஆம்புலன்ஸ் ஒதுக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்சில் பணிபுரியும் மருத்துவ உதவியாளர் மற்றும் வாகன ஓட்டுநருக்கு எப்படி கையாள வேண்டும் என்ற பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனையிலும் போதிய சிகிச்சை ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. இதனால் மக்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் கூறினார்.

நிகழ்ச்சியில் இணை இயக்குநர் மருத்துவர். பரமசிவம், துணை இயக்குநர் மருத்துவர். கோவிந்தன், 108 ஆம்புலன்ஸ் மாவட்ட அதிகாரி ராமன் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் டைட்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *