Tamilவிளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் – இலங்கையை வீழ்த்தி முதலிடம் பிடித்தது இந்தியா

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீட்சில் நேற்று நடைபெற்ற 44-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கையை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் கருணரத்னே பேட்டிங் தேர்வு செய்துள்ளார். மேத்யூசின் அதிரடி சதத்தால் இந்திய அணிக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட், புவனேஸ்வர் குமார், பாண்டியா, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் விழ்த்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா , கேஎல் ராகுல் முதல் விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்தனர். உலகக்கோப்பை தொடரில் தனது 5-வது சதத்தை ரோகித் சர்மா பதிவு செய்தார். 103 ரன்கள் எடுத்த நிலையில் அவர் வெளியேறினார்.

ராகுல் 111, ரிஷப் பந்த் 4 என வெளியேறினர். இதனையடுத்து விராட் கோலி, பாண்டியா அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றனர்.

இந்நிலையில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

இலங்கை தரப்பில் மலிங்கா, ரஜிதா, உதனா ஆகியோர் தலா 1 விக்கெட்டை விழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *