Tamilவிளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் – தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் போட்டி மழையால் ரத்து

தென்ஆப்பிரிக்கா தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனை அடுத்து இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாய நிலையில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆம்லா 6 ரன்களிலும் அதனையடுத்து மார்க்கம் 5 ரன்களிலும் அவுட் ஆனதால் 7.3 ஓவர்களில் தென்னாபிரிக்கா அணி 29 ரன்களுக்குள் 2 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

இந்நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. இதையடுத்து நிண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் போட்டி ரத்து செய்யப்பட்டது என நடுவர்கள் அறிவித்தனர். எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டி ரத்தானதால் தென் ஆப்பிரிக்கா தனது முதல் புள்ளியை பெற்று உள்ளது. ஏற்கனவே இதே தொடரில் இலங்கை-பாகிஸ்தான் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நடைபெறும் அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *