Tamilவிளையாட்டு

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் டிராவில் முடிந்தது

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானததில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடி இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன் சேர்த்தது. தவான் அதிக பட்சமாக 36 ரன் எடுத்தார்.

பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டி காக், ஹென்றிக்ஸ் இருவரும் தொடக்க முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். ஹென்றிக்ஸ் 28 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் அரை சதம் அடித்த டிக் காக் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 16.5 ஓவரில் 140 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரை 1-1 என சமன் செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *