வெற்றிக்கு பங்களித்தது மிகவும் மகிழ்ச்சி – பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால்

ஐ.பி.எல். தொடரில் நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு பிறகு பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் கூறியதாவது ;

அணியின் வெற்றிக்கு பங்களித்ததில் மிகவும் மகிழ்ச்சி. எங்களுக்கு முக்கியமான விஷயம் இரண்டு புள்ளிகள். இந்த ஆட்டத்தில் நிறைய ஏற்ற தாழ்வுகள் இருந்தன. நிறைய முக்கியமான தருணங்கள் இருந்தன, அதைவிட அதிகமாக, நாங்கள் அந்த தருணங்களை வெற்றி பெற்றோம். நாங்கள் ஆக்ரோஷமான, கடினமான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். இவ்வாறு கூறினார்

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Categories: News Sports News