Tamil
இந்தியா, பாகிஸ்தான் அதிகபட்ச நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் – ஜி7 நாடுகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
காஷ்மீர் மாநிலம் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில் 26 சுற்றுலா பயணிகள் உயிர் இழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மீது இந்தியா தனது அசுர… Read More
பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி – முதலமைச்சர் உமர் அப்துல்லா அறிவிப்பு
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் இன்று நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். கடந்த 4 நாட்களில் ஜம்மு காஷ்மீரில் மட்டும் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். Read More
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும். தமிழகத்தில் இன்று முதல் 12-ந்தேதி வரை ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 13 மற்றும் 14-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனிடையே, இன்று முதல் 13-ந்தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். Read More
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு தடை விதித்த இந்திய அரசு!
காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்த இந்தியா எடுத்த முடிவுக்கு பதிலடியாக இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது. இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து அனைத்துப் பொருட்களை யும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்யக்கூடாது என்று வர்த்தக அமைச்சகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. மறு உத்தரவு வரும் வரை பாகிஸ்தானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எந்த ஒரு பொருட்களையும் இறக்குமதி செய்வதையோ அல்லது கொண்டு செல்வதையோ தடை செய்யும் வகையில் விதி சேர்க்கப்பட்டு வெளிநாட்டு வர்த்தக கொள்கை திருத்தப்பட்டு உள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொது கொள்கையின் நலனுக்காக இந்த கட்டுப்பாடு விதிக்க்பபட்டுள்ளது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இந்த தடைக்கு எந்தவொரு விலக்குக்கும் இந்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டும். Read More
தேர்தல் சீட்டுக்காக பணம் கொடுத்து ஏமாறாதீர்கள் – நிர்வாகிகளை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில்… Read More
இந்தியா, பாகிஸ்தான் நிதானமாக இருக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் எல்லையில் ராணுவ… Read More
2024 ஆம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடு – 14 மாணவர்களின் சேர்க்கை ரத்து
2024-ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடு, ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்டவை நடைபெற்றது. சி.பி.ஐ., தேசிய தேர்வு முகமை இணைந்து நடத்திய விசாரணையில் இது தெரியவந்தது. இந்த… Read More
சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளரை தலைமை தான் முடிவு செய்யும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை… Read More
இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை!
காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட… Read More
அரச குடும்பத்துடன் இணைய விரும்புவதாக ஹாரி அறிவிப்பு!
இங்கிலாந்து மன்னர் சார்லசின் இளைய மகன் இளவரசர் ஹாரி. தந்தை மற்றும் சகோதரர் வில்லியம் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக… Read More