
விசாலம்
மழை பெய்ய, நமக்கு நீர் கிடைக்கிறது. இதனால் குளம், ஆறு, கிணறு, கடல் எல்லாம் நீரால் நிரம்புகிறது. நீர் என்பது அறிவியலில் ஹைட்ரஜன் இரண்டு பாகமும் பிராண வாயு ஒரு பாகமும் சேர, உண்டாவது. நாம் பூகோளத்தில் உலகில் மூன்று பங்கு தண்ணீரும் ஒரு பங்கு நிலம் இருப்பதாகவும் படித்திருக்கிறோம். உலகில் பிராண வாயுவிற்குப் பிறகு உயிர் வாழ நீர் மிக அவசியம். பறவைகள், மிருகங்கள், செடி - கொடிகள், பின் மனிதர்கள் எல்லோருக்கும் இந்த நீர் மிக அவசியமாகிறது.
வாஸ்து சாஸ்திரம் இந்தப் பஞ்ச பூதங்களின் அடிப்படையைக் கொண்டது. அது அதற்கென்று தனிப்பட்ட, சரியான இடமும் உள்ளது. இதே போல் தான் நம் உடலையும் பஞ்ச பூதங்கள் ஆட்கொண்டிருக்கின்றன. பிறவியின் போது அது சரியாக இருந்தாலும் போகப் போக, நாம் வாழும் விதத்திலும் நாம் சாப்பிடும் உண்வின் விதத்திலும் பஞ்ச பூதங்களின் பேலன்ஸில் வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் உடல் நோய் உண்டாகிறது. ஆயுர்வேத முறையில் கபம், பித்தம், வாயு எப்படி இருக்கிறது என்று நாடிப் பிடிப்பில் கண்டுபிடிக்கிறார்கள். இதே போல் தான் நாம் கட்டும் வீட்டிற்கும் ஏற்படுகிறது. சரியான இடத்தில் சரியாகப் பஞ்ச பூதங்கள் இயங்க, அங்கு அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகின்றன.
நம் உடலில் 98.4 F இலிருந்து கொஞ்சம் கூடி 101 டிகிரி ஆனாலும் சுரம் வந்துவிட்டது என்கிறோம். இதே போல் வீட்டிற்கும் அக்னி மூலையில் தவறு ஏற்பட்டால் அதாவது அக்னி கொடுக்காமல் அங்கு நீர் நிலை இருந்தால் என்னவாகும்? உடலுக்குச் சுரம் போல் வீட்டிற்கும் ஏதாவது தடங்கல் குழப்பம் தான் வரும்.
இதே போல் காற்று குறைந்தாலோ, அசுத்தக் காற்று இருந்தாலோ நாம் சுவாசிக்க முடியாமல் திணறுகிறோம். இதே போல் வீட்டிற்கும் காற்று கொடுக்கும் இடத்தில் இல்லாமல் சுவரைப் போட்டு மறைத்து வைத்தால் அது, வீட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும்.
வீட்டின் வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் வட கிழக்கிலிருந்தும் வரும் காற்று, நல்ல சக்தியைக் கொடுக்கும்.
ஒரு மனையின் தென் கிழக்கு மூலையை அக்னி மூலை என்பார்கள்.
வானம் அல்லது ஆகாயம் என்பதை ஆங்கிலத்தில் ஸ்பேஸ் என்பார்கள் இதன் முக்கிய தன்மை, ஓசை அல்லது ஒலி அலைகளை எடுத்து அனுப்பும் சக்தி.... தவிர காந்தச் சக்தி; புவி ஈர்ப்புச் சக்தியும் உண்டு.
வீடு கட்டும் போது வட பகுதியும் கிழக்குப் பகுதியும் திறந்த வெளி அதிகமாக இருந்தால் அதிக பாசிடிவ் சக்தி வீட்டிற்குக் கிடைக்கும்.
(தொடரும்....
=============================================
வாஸ்து தொடர்பான உங்கள் கேள்விகள் / ஐயங்களுக்கு விசாலம் பதில் அளிப்பார். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: tamileditor@chennaionline.com
Jul 02, 2009
* Do not use semicolon(;)