
விசாலம்
நாம் முதலிலேயே சதுர மனை அல்லது நீண்ட சதுர மனை எப்போதுமே சிற்ப்பைக் கொடுக்கும் என்று பார்த்தோம். சிறப்பு எப்போது அவர்களுக்குக் கிடைக்கும் என்றால், வீடு கட்டும் போது பஞ்சபூதச் சக்திகள் அங்கு சரியான இடத்தில் அமர்ந்து, பேலன்ஸாக செயல்பட வேண்டும்.
மனைகள் சில குறுகியும் சில நீண்டும் இருப்பதைக் காண்கிறோம். இதேபோல் மனை குறைவாக ஒரு பக்கம் இருந்தால், அதைச் சரி செய்த பின்னே தான் வீடு கட்டத் துவங்க வேண்டும்.
மனையில் வடகிழக்குப் பக்கம் நீண்டிருந்தால் நல்ல பலன்கள் இதே போல் கிழக்குப் பக்கமும் நீண்டிருக்கலாம். தென்கிழக்குப் பகுதி அக்னி மூலை. இந்தப் பகுதி நீண்டிருந்தால் தொட்டதெல்லாம் நஷ்டமாகும். ஏதாவது ஒரு பிரச்சனை தலைதூக்கி கோர்ட் வரை இழுக்கும். அனாவசிய அலைச்சல்கள் உண்டாகும்.
இதே போல் வடமேற்குப் பகுதி நீண்டிருந்தால் வீட்டில் கருத்து வேற்றுமை, அடுத்த வீட்டாருடன் மனபேதங்கள், கட்டுக்கு மீறிய செலவு
என்ற சோதனைகளைச் சந்திக்க நேரிடும்.
தென் மேற்குப் பகுதி கண்டிப்பாக நீண்டிருக்கக் கூடாது. வாழ்க்கை முன்னேற்றத்தில் தடங்கல், மனைவியுடன் பிரச்சனை என்ற பாதிப்புகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்.
ஆகையால் மனைகளை வாங்கும் முன் நன்கு ஆலோசித்து வாங்கவேண்டும்.
(தொடரும்....
=============================================
வாஸ்து தொடர்பான உங்கள் கேள்விகள் / ஐயங்களுக்கு விசாலம் பதில் அளிப்பார். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: tamileditor@chennaionline.com
Sep 29, 2009
* Do not use semicolon(;)