துபாய், நவ.5 (டிஎன்எஸ்)
வீட்டை கொள்யைடித்தது மற்றும் பெண்ணை கொலை செய்தது தொடர்பாக, ஒரு இந்தியர், இலங்கையைச் சேர்ந்த 2 பேருக்கு சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியரான முகமத் நவுசத், இலங்கை நாட்டைச் சேர்ந்த பன்டர் நிக்கார் மற்றும் ஹாலீமா அபூபக்கர் ஆகியோருக்கு இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முகமது நவுசத் கேரள மாநிலம் பட்டாம்பி என்ற இடத்தைச் சேர்ந்தவர்.
கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் சவூதி அரேபிய பெண் ஒருவரைக் கொலை செய்து ஆபரணங்களைத் திருடிய குற்றத்திற்காக இவர்களுக்கு இத்தண்டனை நிறைவேற்றபட்டுள்ளது.
பாலியல் வல்லுறவு, கொலை, ஆயுத முனை கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களுக்கு இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் சவூதி அரேபிய நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி வருகிறது.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)