மும்பை, அக்.30 (டிஎன்எஸ்)
இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று சரிவு காணப்பட்டது. சென்செக்ஸ் 16 ஆயிரத்திற்கும் குறைந்தது.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 156.44 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 15,896.286 ஆக சரிந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 38.85 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 4711.70 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,056 பங்குகளின் விலை அதிகரித்தது. 1,630 பங்குகளின் விலை குறைந்தது. 84 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
ஐசிஐசிஐ வங்கி, டாடா கெமிக்கல்ஸ், அசோக் லைலேண்ட், வோல்டாஸ், கிராம்ப்டன் கிரீவ்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் ஏற்றம் காணப்பட்டது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், சுஸ்லான் எனர்ஜி, ரிலையன்ஸ், சீமென்ஸ், விடியோகான் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.
(டிஎன்எஸ்)
Oct 30, 2009
* Do not use semicolon(;)