சென்னை, நவ.5 (டிஎன்எஸ்)
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரியான சசிகலாவின் உறவினர் டி.டி.வி.தினகரன் மீதான கிரிமினல் வழக்கை சென்னை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் மத்திய அமுலாக்கப் பிரிவு டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் விதித்தது. இந்த அபராதத்தை கட்டத் தவறியதால் அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, டி.டி.வி.தினகரன் மீதான கிரிமினல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)