
இஸ்லாமாபாத், நவ.2 (டிஎன்எஸ்)
பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள ராணுவ தலைமையகம் அருகே, மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் தற்கொலைத் தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், ராணுவத்தினர் உள்பட 24 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் கடந்த மாதம் பயங்கரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
மால் ரோட்டில் உள்ள ஷாலிமர் என்ற ஓட்டலுக்கு வெளியே இன்று காலை 10.40 மணி அளவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் ஓட்டல் கட்டிடத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது.
இன்று காலை மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த தற்கொலைத் தீவிரவாதியை காவல்துறையினர் தடுக்க முயற்சித்தனர். அப்போது சாலிமர் ஓட்டலின் வெளிப்புறம் தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் ராணுவத்தினர் உள்பட 24 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் அந்த இடம் இரத்தக்காடாக மாறியது.
காயமடைந்தர்வர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
(டிஎன்எஸ்)
Nov 02, 2009
* Do not use semicolon(;)