
சென்னை, நவ.5 (டிஎன்எஸ்)
முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஈரோடு அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
முன்னாள் அமைச்சரும், ஈரோடு தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான என்.கே. கே.பி.ராஜா மீது ஆள்கடத்தல், நிலம் அபகரித்தல் வழக்கில் முக்கிய சாட்சியான சிவபாலனை தாக்கியதாக காவல்துறையில் புகார் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் ராஜாவுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது உதவியாளர் காஞ்சிகுமார், அசோக்குமார், செந்தில், வேல், காவலாளி காளியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் என்.கே.கே.பி.ராஜா, அவரது மனைவி உமாமகேஸ்வரி உள்பட 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இவர்களில் ராஜா, அவரது மனைவி உமா மகேஸ்வரி ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு ஈரோடு அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.சி.ஐ.டி. தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டதால், மனு மீதான விசாரணையை நவம்பர் 7ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)