ஒரு வரிக் கேள்விக்கு ஒரு மணி நேரம் பேசி பதில் கொடுக்கிற தனது ஸ்டைலை மாற்றிக்கொண்டு, நறுக் சுருக் என்று பேசப் பழகியிருக்கிறார் ஸ்ரீகாந்த். எல்லாம் மனைவியின் அட்வைஸ் என்கிறார் கேட்பவர்களிடம். மனைவியால் வந்த மாற்றம் இதுமட்டுமல்ல, இன்னும் நிறைய. என்னுடைய நடை உடை பாவனைகளைக் கூட மாற்றிவிட்டேன் என்கிறார் ஸ்ரீ.
கிட்டதட்ட இரண்டு வருடங்கள் கழித்து வரவிருக்கும் தனது படத்தை (ரசிக்கும் சீமானே) எதிர்பார்க்கும் ஸ்ரீகாந்த், முதன் முறையாக நெகட்டிவ் ரோலில் நடிச்சிருக்கேன். மக்கள் ஏத்துப்பாங்க என்று நம்புகிறேன் என்கிறார்.
படத்தின் இயக்குனர் வித்தியாதரன் முக்கிய ரோலில் நடிக்கிறார் இதில். இதனால் தனது முக்கியத்துவம் குறையுமே என்று சற்றே கருத்து வேறுபாடு கெதண்டிருந்த ஸ்ரீ, படத்தைப் பார்த்துவிட்டு அதையும் மறந்துவிட்டாராம். இந்த கேரக்டர்தான் நான் ஏன் எல்லாரையும் பிளாக்மெயில் செய்கிறேன் என்பதற்கு அடிப்படை. அதையே வேண்டாம் என்றால் எப்படி கதையில் அழுத்தம் இருக்கும் என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டாராம். வேறு வழி?