தனது மகனைப் பறி கொடுத்த சோகத்தில் முடங்கிப் போயிருந்தார் பிரபுதேவா. வீட்டிலேயே இருந்தால் அதே சிந்தனை விரட்டிக்கொண்டிருக்கும். படப்பிடிப்பைத் துவங்கலாமே என்று பிரகாஷ்ராஜ் கூறினாராம். அதுவும் சரிதான் என்று யோசித்த பிரபுதேவா, தனது வில்லு பட ஷூட்டிங்கைத் துவங்கிவிட்டார். பின்னி மில்லில் நடைபெற்ற நடனக் காட்சியில் கலந்துகொண்டாராம்.
இந்தப் பாடலுக்கு நடன இயக்குனர் வேறு ஒருவர் என்றாலும், கேமிராவுக்குப் பக்கத்தில் ஒரு நாற்காலியைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்துவிட்டாராம். இவர் படப்பிடிப்புக்கு வருவதற்கு முன்பே யூனிட்டில் எல்லாருக்கும் சொல்லப்பட்ட விஷயம், துக்கம் விசாரிக்கிறேன் என்று யாரும் அவரது துக்கத்தைக் கிளற வேண்டாம். அமைதியாக அவரவர் வேலையைப் பாருங்கள் என்பதுதான்!
எல்லாவற்றையும் மறக்கடிக்கிற சக்தி காலத்திற்கு உண்டு. அதுதான் இப்போது பிரபுதேவாவைத் தேற்ற வேண்டும்.
* Do not use semicolon(;)