பஞ்சாமிர்தம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் கனிமொழி எம்.பி. குழந்தைகளுக்காகப் படங்கள் எடுப்பது இப்போது அரிதாகி வரும் நிலையில், அபிராமி ராமநாதனின் இந்த முயற்சி தொடர வேண்டும் என்றார் தனது உரையில்.
இப்படத்தின் விளம்பர நோக்கத்தோடு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கு நடனப் போட்டி நடத்தப்பட்டது. இதை கலைஞர் டி.வி.யுடன் இணைந்து நடத்திய அபிராமி ராமநாதன், வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு இரண்டு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு அளித்தார். படத்தின் பாடல்கள் மூன்றை திரையிட்டார்கள். சுந்தர் சி பாபுவின் இசையில் நாசர் ஆடும் பாடல் ஒன்று இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் குத்துப்பாடலாக இருக்கும் போலிருந்தது. ஆச்சர்யம் என்னவென்றால், இப்போதுள்ள இளம் நடிகர்கள் கூட ஆச்சர்யப்படும் விதத்தில் ஆடி அசத்தியிருந்தார் நாசர்.
கனிமொழி கேட்டுக்கொண்டது போல, தொடர்ந்து குழந்தைகளுக்கான படங்களை எடுக்கப் போகிறாராம் அபிராமி ராமநாதன்.
* Do not use semicolon(;)