தனது அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்பதை ஒரு வழியாக முடிவு செய்துவிட்டார் அஜீத். அமர்க்களம் படத்தின் மூலம், அஜீத்தின் திரையுலக வாழ்க்கைக்கு மட்டுமல்ல, திருமண வாழ்க்கைக்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்த சரண்தான் இப்படத்தின் இயக்குனராம் (அமர்க்களம் படத்தின் போதுதான் அஜீத்திற்கும், ஷாலினிக்கும் காதல் வந்தது).
சொந்தப் படம் எடுத்து பெரும் கடனில் சிக்கி அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்த சரண், அவ்வளவு கஷ்டத்திலும் அஜீத்தின் உதவியை எதிர்பார்க்கவே இல்லை. இந்த ஒரு விஷயத்திற்காகவே சரணை அழைத்து இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார் அஜீத். வேடிக்கை என்னவென்றால், கவுதம் இயக்குவதாக இருந்த இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். அஜீத் படத்திற்கு இப்போதுதான் முதன் முதலாக இசையமைக்கிறார் ஹாரிஸ்.
பல்லவியை நச்சுன்னு போடுங்க!
* Do not use semicolon(;)