பிடிச்சிருக்கு, மகேஷ் சரண்யா மற்றும் பலர் ஆகிய இரு படங்களிலும் சுமார் நாலு கோடி ரூபாய் நஷ்டம். தமிழ் சினிமா மீது காதலோடு படம் எடுக்க வந்த வெளிநாட்டு இந்தியரான சித. செண்பககுமார் மேற்படி இரு படங்களையும் லிங்குசாமியின் உதவியாளர்களை வைத்து எடுத்திருந்தார். தற்போது சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகிவரும் ஆறுமுகம் படமும் செண்பகக்குமாரின் தயாரிப்புதான்.
மேற்படி படங்களின் நஷ்டம், ஆறுமுகம் படத்தையும் பாதித்திருக்கிறது. ஐதராபாத்தில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாம். மீண்டும் பொருளாதார நிலைமைகளை சீர் செய்துவிட்டுதான் படத்தைத் தொடர முடியும் என்று கூறிவிட்டாராம் தயாரிப்பாளர். ஆகவே சென்னையில் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார் பரத்!
* Do not use semicolon(;)