விலகிக் கொண்டார் நயன்தாரா

Nayantharaநீண்ட நாள் யூகம் உண்மையாகிவிட்டது. லிங்குசாமி படத்திலிருந்து விலகிக் கொண்டார் நயன்தாரா. கடந்த சில தினங்களுக்கு முன்புவரை நயன்தாராதான் அந்த கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறிவந்த லிங்குசாமி, படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முதல்நாள் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ளும்படி மீண்டும் வற்புறுத்தினாராம். இதையடுத்துத்தான் தனது விலகல் முடிவை எடுத்திருக்கிறார் நயன்தாரா.

இந்தப் படத்திற்காக நான்கு மாதங்களாகக் காத்திருந்தேன். சில தெலுங்குப் பட வாய்ப்புகளையும் இழந்திருக்கிறேன். ஒப்பந்தம் போடுவதற்கு முன் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று கேட்டிருந்தால் குறைத்திருப்பேன். அதை விட்டு விட்டுக் கடைசி நேரத்தில் வற்புறுத்தியதால், நான் இந்த படத்திலிருந்து விலகிக் கொள்கிறேன். எனக்கு ஏற்பட்ட லட்சக்கணக்கான நஷ்டத்தை லிங்குசாமி கொடுப்பாரா என்று கேட்டிருக்கிறார் நயன்.

ஸ்ரீதேவிக்குப் பிறகு நான் அதிகம் வியந்து பார்த்த நடிகை நயன்தாராதான் என்று பேட்டியளித்த லிங்குசாமி இப்போதும் அதே எண்ணத்தோடுதான் இருக்கிறாரா தெரியவில்லை.

மேலும் December 6th, 2008

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)

Previous:     சின்னக் கலைவாணரின் கோபம்


உங்கள் வாக்கு

சர்ச்சையில் 'வந்தே மாதரம்'
'வந்தே மாதரம்' பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என இஸ்லாமிய அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது சரியா?


பிறந்த நாள் காணும் கமல்ஹாசனை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

VRICHIKA VRICHIKA : A day where you will find yourself cheerful and happy.! So start the proces...More
 Athreya - A success story

She kick started her bisiness in 1993 and was contemplating on which kind of business to take up.....More

Most Commented
03:09 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.