என்எஸ். கலைவாணரின் நூற்றாண்டு விழா சென்னையில் உள்ள என்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவுக்குத் தலைமை ஏற்றவர் முன்னாள் அரசியல்வாதி ஜேப்பியார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் இவர். விழாவில் கலந்து கொண்ட மற்றொரு விவிஐபி சின்னக் கலைவாணர் விவேக்.
ஜேப்பியாரைப் பற்றிப் பேசும்போது எம்.ஜி.ஆரைத் தவிர்த்துவிட்டு எப்படிப் பேசுவது? "என்னைப் பொருத்தவரை கருப்பு எம்.ஜி.ஆர்னா அது ஜேப்பியார்தான்" என்றார் விவேக். இது மெல்ல வெளியே கசிய, அப்ப விஜயகாந்தை அப்படிச் சொல்லக் கூடாதுன்னு சொல்றாரா விவேக் என்று கேள்வி எழுப்பும்படி ஆனது.
இந்த விஷயத்தை விவேக்கிடமே கேள்வியாகக் கேட்டார் நிருபர் ஒருவர். அவ்வளவுதான்... அந்த நிருபரைக் கடித்துக் குதறிவிட்டார் விவேக். "காமெடியன்களுக்கும், கேப்டனுக்கும் சண்டையை மூட்டிவிடலாம்னு நினைக்கிறீங்களா? என்னை பொருத்தவரை ஜேப்பியாரை அப்படி நினைக்கிறேன்னு செதன்னேன். அதுக்காக இன்னொருத்தரை இழிவுபடுத்தறேன்னு அர்த்தமில்லே" என்றார் கடும் கோபத்தோடு.
அதுவும் சரிதேன்...
* Do not use semicolon(;)