சமீபத்தில் புதுமுகங்கள் நடிக்கும் ஒரு திரைப்பட விழாவில் கலந்துகொண்டார்கள் வெங்கட் பிரபு, ஜெய், மற்றும் விஜயலட்சுமி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள். இவர்களின் வேலை, அந்தப் படத்தில் நடிக்கும் புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதுதான்.
சீரியஸான ஒரு விஷயத்தை தனக்கே உரிய காமெடியாகச் சொன்னார் வெங்கட் பிரபு. சென்னை 28, சுப்ரமணியபுரம் படத்திற்குப் பிறகு ஜெய்யிடம் ஒரு படத்திற்காகக் கால்ஷீட் கேட்டேன். கையிலே ஆறு படங்களுக்கு மேலே இருக்கு. 2010க்கு மேலதான் கால்ஷீட் தர முடியும்னு சொல்லிட்டாரு. அவரை மாதிரியே இந்த படத்தில் நடிக்கும் பசங்களும் முன்னுக்கு வரணும் என்றார்.
மேடையில் அவ்வளவு இடம் இருக்க, ஜெய் பக்கத்திலே போய் நின்றுகொண்டார் விஜயலட்சுமி. போட்டோ கிராபர்கள் படம் எடுக்க போஸ் கொடுக்கச் சொன்னபோது, கொஞ்சமும் தயங்காமல் விஜயலட்சுமியின் தோள் மேல் ஜெய் கைபோட்டுக் கொண்டார் ஜெய். சின்ன வெட்கத்தோடு அதை அனுமதித்தார் விஜயலட்சுமி.
இதன் மூலம் அறியப்படுவது யாதெனில்....
* Do not use semicolon(;)