ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி, பின்பு பரத் நடிக்கும் பிப்ரவரி 14 என்ற படத்தை இயக்கியவர் எஸ்.பி. ஹோசிமின். ஆனந்த விகடனில் பத்திரிகையாளராகவும் பணியாற்றியவர். இவரது இரண்டாவது படம் தள்ளிக்கொண்டே போனதால், இடையில் தனது குருநாதர் ஷங்கரின் சிவாஜியிலும் பணியாற்றினார்.
தற்போது செவுந்தர்யா ரஜினிக்கு ஒரு கதையைச் சொல்லி அசத்தியிருக்கிறாராம். கோவா படத்திற்குப் பிறகு இப்படத்தைத் துவங்கவிருக்கிறார்கள். நகுல் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ராஜ்கிரண்.
நகுலும் செவுந்தர்யாவும் ஆசிரம் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். ஹோசிமின் சொன்ன கதையைக் கேட்ட செவுந்தர்யா, நகுலிடம் அனுப்பி கதை கேட்க வைத்தாராம். முடிவு பழம் என்பதால் உடனடியாகக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். தலைப்பு? ஆயிரம் காதல்!
* Do not use semicolon(;)