'மதுரை சம்பவம்' என்ற தலைப்பில் ஒரு புதிய படத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். தலைப்பைக் கேட்டால் வேறு ஒரு முக்கிய சம்பவத்தைப் பற்றி யோசித்துவிடுவோம் என்று நினைத்தார்களோ என்னவோ, இந்தக் கதை மதுரையில் நடைபெறும் நிழல் உலக விஷயங்கள் பற்றியது என்கிறார்கள்.
தமிழ் சினிமாவை மதுரைதான் ஆளுது என்றார் இயக்குனர் அமீர். அவர் சொல்லுக்கு மேலும் உரம் சேர்ப்பது போல, முழுப் படத்தையும் மதுரையிலேயே ஷூட் பண்ணுகிறார்களாம். கிரீடம் படத்தைத் தயாரித்த சுரேஷ் பாலாஜி இப்படத்தைத் தயாரிக்கிறார். தூத்துக்குடி, திருத்தம் பேதன்ற படங்களில் நடித்த ஹரிக்குமார் ஹீரோவாக நடிக்க, இவருக்கு ஜோடியாக கார்த்திகா (அதானே பார்த்தோம்) மற்றும் அனுயா ஆகியோர் நடிக்கிறார்கள்.
விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய யுரேகா படத்தை இயக்குகிறார். இவர் தமிழ் சினிமாவில் முப்பதுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறாராம். இந்தப் படத்திற்கும் இவரேதான் பாடல்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
* Do not use semicolon(;)